Connect with us

பந்துவீச்சில் பட்டயகிளப்பிய சென்னை அணி – கொல்கத்தா அணி 139 ரன்கள் குவிப்பு..!!!

Featured

பந்துவீச்சில் பட்டயகிளப்பிய சென்னை அணி – கொல்கத்தா அணி 139 ரன்கள் குவிப்பு..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் உலக புகழ் பெற்ற சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் CSK – KKR அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் KKR அணிக்கு எதிராக டாஸ் வென்ற CSK அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து சென்னை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக நரைன் – ஃபில் சால்ட் களமிறங்கினர் . இதில் சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சால்ட் டக் அவுட்டாக நரேனும் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி – கேப்டன் ஷ்ரேயசுடன் இணைந்து நிதானமாக விளையாட அவர்களும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க . இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 137 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி தற்போது களத்தில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோடை வெயிலுக்கு குதூகலமாக வெளியானது குரங்கு பெடல் படத்தின் ட்ரைலர்..!!

More in Featured

To Top