Connect with us

ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன்: விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

Featured

ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன்: விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

உலக அழகி ஐஸ்வர்யா ராய், 1997ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றவர், தமிழ் சினிமாவிலும் பெரும் புகழை பெற்றவர். மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தில் அறிமுகமான பின்னர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன், பொன்னியின் செல்வன் போன்ற பல பரபரப்பான படங்களில் நடித்தார். தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் பெங்காலி என பல மொழிகளில் பிரபலமான இவர், பல விருதுகளை வென்றுள்ளார்.

அவர் பாலிவுட் நடிகர் அமிதாப்பச் சன் அவர்களின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுடன் காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், இணையத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஜோடியின் விவாகரத்து குறித்த பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதனால், அவர்களின் பிரபல வாழ்கையில் பிரச்சனைகள் ஏற்படும் என்ற தவறான தகவல்கள் பரவியது.

ஆனால், சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்டமான விருந்தில் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் மற்றும் பிரின்யா ஆகியோர் மகிழ்ச்சியாக ஒன்றாக கலந்து, புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படங்களை தயாரிப்பாளர் அனு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதன் மூலம், விவாகரத்து பற்றிய எந்தவொரு சர்ச்சைக்கும் அடிப்படை இல்லை என்பதையும், அந்த ஜோடி மகிழ்ச்சியாக ஒன்றிணைந்து வாழ்ந்திடுகிறார்கள் என்பதையும் உறுதிப்படுத்தியது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top