Connect with us

எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலினின் விடியா அரசை கண்டித்து கடிதம்..மீனவர்களை மீட்டெடுப்போம்!

Politics

எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலினின் விடியா அரசை கண்டித்து கடிதம்..மீனவர்களை மீட்டெடுப்போம்!

தமிழக மீனவர்களை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கையை வெளிட்டு இருக்கின்றார்…

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் கடந்த மாதம் 22-ந் தேதி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களுக்கு 2 கோடியே 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழகத்தின் பொம்மை முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறாராம்.என எடபப்டி எழுத ஆரம்பித்து இருக்கின்றார்..

அபராதம் மிகவும் அதிகமானது,மீனவர்களின் சக்திக்கு அப்பாற்பட்டது என்று அந்தக் கடிதத்தில் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்.இது எந்த விதத்தில் நியாயம் அவர் பேசுவது சரியா..?

உண்மையில் தமிழக மீனவர்கள் மீது இந்த விடியா அரசின் முதல்வருக்கு அக்கறை இருந்திருந்தால் அபாரதத் தொகையை செலுத்தி மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி விசை படகுகளை மீட்டு தர வேண்டியதுதானே..

அந்த காசு கூட இல்லையா..?மனசும் இல்லையா?ஒன்றிய அரசு என்று கொச்சைப்படுத்திய மத்திய அரசின் காலில் பொம்மை முதல்வர் எதற்காக விழுந்து கெஞ்ச வேண்டும். உக்ரைன், மணிப்பூர் நிகழ்வுக்கெல்லாம் அதிகாரமே இல்லாமல் பொங்கி நாடகமாடிய ஸ்டாலின் இப்போது தேவையான ஒன்றுக்கு பேசாமல் இருப்பது சரியா..இதனை கேட்க யாருமே இல்லையா??

தமிழக மீனவர்கள் செலுத்த வேண்டிய அபராதத்தொகையை செலுத்த முன்வராதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது…இப்படி ஒரு முகத்தை காட்டி ஏமாற்றாதீர்கள்….தமிழக அப்பாவி மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க அபராதத்தொகையை செலுத்தும்படி வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்…இந்த கடிதம் வைரலாகி வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மெட்ரோ ரயிலில் பயணிக்காமல், வாகன நிறுத்தத்தை மட்டும் பயன்படுத்தினால் அதிக கட்டணம் வசூலிக்கப்படும்..!!

More in Politics

To Top