Connect with us

பள்ளி, கல்லூரி நேரங்களில் இனி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் சிவசங்கர்

Featured

பள்ளி, கல்லூரி நேரங்களில் இனி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் சிவசங்கர்

பள்ளி, கல்லூரி நேரங்களில் இனி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் அனைத்து நவக்கிரக கோயில்களையும் தரிசிக்கும் வகையில் சிறப்பு பேருந்தினை கும்பகோணம் பேருந்து நிலையத்தில் மக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் சிவசங்கர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார் .

இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது :

அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தற்போது மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால் அவர்கள் தேவைக்கேற்ப பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

எந்த இடங்களில் பேருந்துகள் இயக்கம் தேவை என்று தெரிவித்தால் அவ்வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் .

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தமிழக அரசு நிச்சயம் தனது கடமையை கண்ணியம் தவறாமல் செய்யும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வான்கடே மைதானத்தில் வானவேடிக்கை காட்டுமா மும்பை..? கொல்கத்தா - மும்பை அணிகள் இன்று மோதல்..!!

More in Featured

To Top