Connect with us

நடிகர் கிருஷ்ணா கைது… போதைப்பொருள் வழக்கில் முக்கிய ஆதாரம் வெளியாகியது!

Featured

நடிகர் கிருஷ்ணா கைது… போதைப்பொருள் வழக்கில் முக்கிய ஆதாரம் வெளியாகியது!

போதைப்பொருள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையதாக நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்நிகழ்வில் தற்போது நடிகர் கிருஷ்ணாவும் சிக்கியுள்ளார்.

தலைமறைவாக இருந்த நடிகர் கிருஷ்ணாவை போலீசார் தனிப்படை அமைத்து தேடி கண்டுபிடித்தனர். அதன் பின்னர் அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின் போது, “உடல்நிலை பிரச்சனைகளால் நான் போதைப்பொருள் பயன்படுத்த முடியாது” என்று அவர் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாம் நாளாக தொடர்ந்த விசாரணையின் பின்னர் இன்று போலீசார் அவரை கைது செய்துள்ளனர். நடிகர் கிருஷ்ணா, “நான் மருந்துகள் மட்டும் தான் எடுத்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தாலும், போதைப்பொருள் வாங்க டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்ததற்கான ஆதாரங்கள் போலீசாரிடம் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அவரது வீட்டிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. சிகிச்சைக்காக அவர் பயன்படுத்திய மாத்திரைகள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top