Connect with us

இந்த புயல் என்ன செய்ய காத்திருக்கோ : சென்னையில் இருந்து 420 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!!

Featured

இந்த புயல் என்ன செய்ய காத்திருக்கோ : சென்னையில் இருந்து 420 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 17 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள லேட்டஸ்ட் அப்டேட்டில் கூறிருப்பதாவது :

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 17 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

சென்னையில் இருந்து 420 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். இதைதொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து டிச.4ம் தேதி முற்பகல் வடதமிழகத்தை வந்தடையும்.

வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று பின்னர் ஆந்திராவின் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே டிச.5ம் தேதி முற்பகலில் கரையைக் கடக்கும் .

இந்த புயலானது கரையை கடக்கும் போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மீனவர்கள் யாரும் மறு அறிவித்து வரம் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் அனைவரும் உடனே கரை திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகை மடோனா செபாஸ்டியன் Glamour போட்டோஷூட்..

More in Featured

To Top