Connect with us

கனமழை காரணமாக 2 நாட்களாக ரயிலில் சிக்கிய 500 பயணிகளும் பத்திரமாக மீட்பு..!!

Featured

கனமழை காரணமாக 2 நாட்களாக ரயிலில் சிக்கிய 500 பயணிகளும் பத்திரமாக மீட்பு..!!

கனமழை காரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில்,
2 நாட்களாக தவித்து வந்த 500க்கும் மேற்பட்ட பயணிகள் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தென் தமிழகத்தில் பெய்து வரும் வரலாறு காணாத பேய் மழையின் காரணமாக ஊருக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன்காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சுமார் 800 பயணிகள் சிக்கிய நிலையில் அவர்களில் 300 பேர் நேற்று மீட்பு படையினரால் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று அணைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஹெலிகாப்டர் உதவியுடன் அணைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட ரயில் பயணிகள், வெள்ளூரில் இருந்து சிறப்பு பேருந்துகள் மூலம் வாஞ்சிமணியாச்சிக்கு அழைத்து வரப்பட்டனர் . வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து, சிறப்பு எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை எழும்பூருக்கு அவர்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் - அசுர பலம் கொண்ட ஹைதராபாத்தை அசால்டாக வீழ்த்தியது சென்னை அணி..!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top