Connect with us

சென்னை உள்பட புயல் பாதித்த 4 மாவட்டடங்களில் டிச. 11-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு..!!

Featured

சென்னை உள்பட புயல் பாதித்த 4 மாவட்டடங்களில் டிச. 11-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு..!!

மிக்சாங் மழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 11-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது .

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

கடும்மழையையும் பெரு வெள்ளத்தையும் சந்தித்துள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி வளாகத்தை முழுமையாக தூய்மை செய்து உடைந்த பொருட்கள், கட்டட இடிபாடுகளை அகற்ற வேண்டும்.

மழையால் சில வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றை பூட்டி மாணவர்கள் செல்லாதவாறு பள்ளி நிர்வாகமும் குறிப்பாக ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

பள்ளிகள் திறக்கப்படும் முன் வளாகத்தை கட்டாயம் ஆய்வு செய்து பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே அப்பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மெட்ரோ ரயிலில் பயணிக்காமல், வாகன நிறுத்தத்தை மட்டும் பயன்படுத்தினால் அதிக கட்டணம் வசூலிக்கப்படும்..!!

More in Featured

To Top