Connect with us

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1 வருடத்தில் 1,000 கோடியை கடந்த காணிக்கை – வெளியான லேட்டஸ்ட் தகவல்..!!

Featured

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1 வருடத்தில் 1,000 கோடியை கடந்த காணிக்கை – வெளியான லேட்டஸ்ட் தகவல்..!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1 வருடத்தில் சுமார் 1,000 கோடிக்கும் மேல் காணிக்கை வந்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் இருக்கும் பல முக்கிய கோவில்களில் பணக்கார கோவிலாக வலம் வருவது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான் . இந்த கோவிலில் மட்டும் நாள் ஒன்றுக்கு பல கோடிகள் உண்டியல் காணிக்கையாக வருகிறதாம் .

உலகின் பல்வேறு இடங்களில் இருந்து இந்த கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு நீண்ட காலமாக சுவையான லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது . உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான இந்த லட்டினை கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவறாது வாங்கிச்செல்வது வழக்கம் . அது என்னவோ தெரியவில்லை இந்த லட்டு மட்டும் தனி சுவையாக தான் இருக்கிறது .

இந்நிலையில் இந்த ஆண்டில் திருப்பதி கோவிலுக்கு எத்தனை பத்தர்கள் வந்துள்ளனர் எவ்ளோ காணிக்கை வந்துள்ளது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்தாண்டில் மட்டும் உண்டியல் காணிக்கையாக, 1,398 கோடி பெறப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது .

இந்த ஆண்டில் சுமார் 2.52 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் ஜூலையில் அதிகபட்சமாக ரூ 129 கோடியும், குறைந்தபட்சமாக நவம்பரில் 108 கோடியும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Thalaivar 173 அப்டேட் – ஏப்ரல் ஷூட்டிங் குறித்து சிபி சக்ரவர்த்தி கூறியது

More in Featured

To Top