Connect with us

கேப்டன் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்படுகிறது -தேமுதிக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

Cinema News

கேப்டன் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்படுகிறது -தேமுதிக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத் திடலில் நாளை வைக்கப்பட உள்ளதாக தேமுதிக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை காலமானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்த கேப்டன் விஜயகாந்த், தேமுதிக தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியல் வாழ்விலும் மிடுக்கான நடைபோட்டு வந்தார் .

சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் கொடிகட்டி பறந்த கேப்டன் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாவே உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் வாழ்விலிருந்து விலகி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சமீபகாலமாக உடல்நிலை மிகவும் மோசமாகவே தொடர் சிகிச்சையில் இருந்து வந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை பலன் இன்றி காலமாகி உள்ளார் .

இந்நிலையில் தற்போது கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடல் நாளை காலை 6 மணிக்கு தீவுத்திடலுக்கு மாற்றப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

மதியம் 1 மணி வரை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட உள்ளதாகவும் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நாளை மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தின் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தும் அரண்மனை 4 - இதுவரை எவ்ளோ வசூல் தெரியுமா..?

More in Cinema News

To Top