Connect with us

நடிகர் ஸ்ரீகாந்த் கைது: போதைப்பொருள் வழக்கில் இரு தமிழ் ஹீரோக்கள் சிக்கல்!

Featured

நடிகர் ஸ்ரீகாந்த் கைது: போதைப்பொருள் வழக்கில் இரு தமிழ் ஹீரோக்கள் சிக்கல்!

சினிமா துறையினர் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் சிக்குவது இதுவே முதல் முறை அல்ல. பாலிவுட், டோலிவுட், கன்னட திரைப்படத் துறைகள் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்பட உலகங்களிலும், இதற்கு முந்தைய காலங்களில் பல பிரபலங்கள் போதைப்பொருள் வழக்குகளில் சிக்கியிருந்தனர்.

தற்போது தமிழ் சினிமா துறையிலும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் ஏற்பட்ட அடிதடி சம்பவத்தில், பிரசாத் என்ற அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் விற்றதாக கூறப்படும் போதைப்பொருள் சில பிரபலங்களால் வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் அடிப்படையில், நடிகர் ஸ்ரீகாந்த் மீது போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். அவர் மீது ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, ஸ்ரீகாந்த் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கழுகு படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கிருஷ்ணாவிடம் குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரும் எந்த வகையான தொடர்பில் உள்ளார் என்பதற்கான தகவல்களை தெரிந்து கொள்ள நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவங்கள் திரையுலகை உலுக்கியுள்ளன. ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலகத்தினரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top