Connect with us

தமிழ்த்திரையுலகம் நமக்குத் தந்த ஒப்பற்ற மாமனிதர் இன்று உயிருடன் இல்லை – சிவகார்த்திகேயன் உருக்கம்

Cinema News

தமிழ்த்திரையுலகம் நமக்குத் தந்த ஒப்பற்ற மாமனிதர் இன்று உயிருடன் இல்லை – சிவகார்த்திகேயன் உருக்கம்

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது இரங்கலை உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிருப்பதாவது :

தமிழ்த்திரையுலகம் நமக்குத் தந்த ஒப்பற்ற மாமனிதர் புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்த செய்தி என்னை ஆழ்ந்த துயருக்குள் ஆழ்த்திவிட்டது.

எத்தனையோ கோடி உள்ளங்களின் அன்புக்குச் சொந்தக்காரர், அள்ளித்தரும் பண்புக்கும், அரவணைப்பும் தலைமைப்பண்பும் தனக்கே உரிய பாணியில் கொண்ட மேம்பட்ட மனிதர் , பிறர் பசியை தன் பசியாய் உணர்ந்த உன்னத மனிதர் .

அன்பால் பண்பால் அறத்தால் மறத்தால் நம் அனைவரின் அன்பையும் ஆதரவையும் வெற்றி கொண்டவர். அவரது மறைவு திரை உலகம் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் ஓர் மிகப்பெரிய இழப்பு.

புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவால் வாடும் அனைவருக்கும் இந்த நேரத்தில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தும் அரண்மனை 4 - இதுவரை எவ்ளோ வசூல் தெரியுமா..?

More in Cinema News

To Top