Connect with us

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பின் மகன் ஷண்முக பாண்டியன் போட்ட முதல் பதிவு – செம வைரல்

Cinema News

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பின் மகன் ஷண்முக பாண்டியன் போட்ட முதல் பதிவு – செம வைரல்

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு பின் அவரது இளைய மகன் ஷண்முக பாண்டியன் போட்ட முதல் பதிவு தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் கடந்த 28 ஆம் தேதி உயிரிழந்தார்.

கேப்டனின் மறைவு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அவரது உடலுக்கும் பொதுமக்கள் திரையுலகினர் அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து நேற்று முன்தினம் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் கேப்டனை உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு பின் அவரது இளைய மகன் ஷண்முக பாண்டியன் போட்ட முதல் பதிவு தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

இதுகுறித்து ஷண்முக பாண்டியன் போட்டுள்ள பதிவில் கூறிருப்பதாவது :

உங்களின் இதயபூர்வமான இரங்களுக்கு எங்களின் நன்றிகள். நீங்கள் கொடுத்த ஆதரவு அனைத்துமே என்னுடைய அப்பா எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் என்பதை காட்டிக்கிறது.

இந்த கடுமையான நேரத்தில், எங்கள் குடும்பத்திற்கு ஆறுதலை கொடுத்துள்ளது என்று சண்முக பாண்டியன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விராட் கோலி தடாலடி பேட்டிங் - பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 242 ரன்கள் இலக்கு..!!

More in Cinema News

To Top