Connect with us

விழா மேடையில் பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!!

Cinema News

விழா மேடையில் பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!!

பிரபல மலையாள நடிகை அனுப்பமா விழா மேடை ஒன்றில் தனது பேச்சை தொடங்கும் முன் நடிகர் NTR ரசிகர்கள் அசோகரியமான அனுபவத்தை கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது .

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுப்பமா பரமேஸ்வரன். தமிழ் , தெலுங்கு , மலையாளம் என பல மொழி படங்களில் மிகவும் பிசியாக நடித்து வரும் இவரது நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள ‘டில்லு ஸ்கொயர்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் சக்கை போடு போடு வருகிறது.

மாலிக் ராம் இயக்கிய இந்த படத்தில், சித்து ஜொன்னலகட்டா ஹீரோவாகவும், அனுபமா பரமேஸ்வரன் படத்தின் கதையின் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

உலகளவில் சுமார் 100 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்துள்ள இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றுள்ளது . இந்த வெற்றி விழாவில் படத்தின் நாயகன், நாயகி என ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்துகொண்டனர்.

அப்போது மேடையில் பேச வந்த நடிகை அனுப்பமா தனது பேச்சை தொடங்கும் முன் நடிகர் NTR ரசிகர்கள் அவரை பேச விடாமல் கூச்சலிட்டுள்ளனர் . இதனால் செய்வதறியாது நின்ற அனுபாமாவின் வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மூன்றாம் முறை ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் பிரதமர் மோடியின் மீது எதிர்ப்பு அலை வீசுகிறது - செல்வப்பெருந்தகை சாடல்

More in Cinema News

To Top