Connect with us

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் – சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

Featured

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் – சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல வானிலை ஆய்வு மைய துணைத் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது :

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், தமிழகத்தில் 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது.

கனமழை எச்சரிக்கையை பொறுத்தவரை அடுத்துவரும் 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரையும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். இதன்காரணமாக இப்பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.

ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளது .

திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top