Connect with us

கோலாகலமாக தொடங்கியது 2024 IPL தொடர் – முதல் போட்டியில் CSK அணிக்கு எதிராக டாஸ் வென்ற RCB அணி பேட்டிங் செய்ய முடிவு..!!

Featured

கோலாகலமாக தொடங்கியது 2024 IPL தொடர் – முதல் போட்டியில் CSK அணிக்கு எதிராக டாஸ் வென்ற RCB அணி பேட்டிங் செய்ய முடிவு..!!

பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியுடன் நடப்பாண்டுக்கான IPL கிரிக்கெட் தொடர் சென்னையில் இன்று கோலாகலமாக தொடங்கி உள்ளது.

முதல் நாளான இன்று நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலபரீட்சை நடத்த உள்ளது.

ரசிகர்கள் ஒன்று கூடி மைதானத்தை ஆளறவிட ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட திரையுலகில் இருக்கும் ஏரளமான திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற இந்த IPL தொடரின் தொடக்க விழா பிரம்மாண்டமாக முடிவடைந்தது.

இதையடுத்து முதல் போட்டியில் டாஸ் போடப்பட்ட நிலையில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

13 வருடங்களாக சென்னை அணியின் கேப்டானக செயல்பட்டு வந்த தோனி நடப்பு தொடரில் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி உள்ள நிலையில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள இளம்வீரர் ருதுராஜ் தலைமையின் கீழ் சென்னை அணி முதல் முறை களம் காண உள்ளது.

இதன்காரணமாக விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெறும் இந்த முதல் போட்டியில் எந்த அணி வெல்ல போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய IPL நிர்வாகம் - சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு அபராதம்..!!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top