Connect with us

புஷ்பா 2 படம் குறித்து மனம் திறந்த நடிகை ராஷ்மிகா – என்ன சொன்னார் தெரியுமா..?

Cinema News

புஷ்பா 2 படம் குறித்து மனம் திறந்த நடிகை ராஷ்மிகா – என்ன சொன்னார் தெரியுமா..?

ரசிகர்களின் ஏகபோக எதிர்பார்ப்புக்கிடையே விறுவிறுப்பாக உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படம் குறித்து நடிகை ராஷ்மிகா மனம்திறந்து பேசியுள்ளது ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.

தெலுங்கு திரையுலகில் கொடி பறப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன் இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘புஷ்பா: தி ரைஸ்’.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகாவின் தரமான நடிப்பில் திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது .

இதுமட்டுமின்றி இப்படம் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது . இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அமோக வரவேற்பால் தற்போது புஷ்பா பார்ட் 2 விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இந்நிலையில், புஷ்பா படத்தின் பயணம் குறித்து மனம்திறந்து பேசியுள்ள நடிகை ராஷ்மிகா கூறிருப்பதாவது :

புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் எனது கதாபாத்திரத்திற்கு கூடுதல் பொறுப்பும் சேர்ந்துள்ளது. புஷ்பா படப்பிடிப்பு தளம் என் வீடு போல மாறி விட்டது.

இன்னும் சில நாட்களில் நாங்கள் பிரியப்போவதை நினைத்தால் மிகவும் கடினமாக உள்ளது அனைவரும் எதிர்பார்ப்பது போல் புஷ்பா 3 ஆம் பாகமும் நிச்சயம் வரும் என உங்களை போல் நானும் எதிர்பார்க்கிறேன் என நடிகை ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 ஏகே 64 அப்டேட் – ஆதிக் ரவிச்சந்திரன் கூறிய தகவல் தல ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது! 🎬

More in Cinema News

To Top