Connect with us

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் பொன்னம்பலம் – என்ன நடந்தது?

Featured

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் பொன்னம்பலம் – என்ன நடந்தது?

நடிகர் பொன்னம்பலம் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். குறிப்பாக ‘நாட்டாமை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன.

தற்போது அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வரும் தகவல்கள் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிறுநீரக தொற்று காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தொற்றுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும், சிகிச்சை செலவுக்காக நடிகர்கள் ஜெயம் ரவி, சரத்குமார் உள்ளிட்டோர் அவருக்கு நிதியுதவி செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் உதவிக்கு நடிகர் பொன்னம்பலம் தனது நன்றியை தெரிவித்துள்ளார். சிகிச்சைக்கு பிறகு அவர் உடல்நிலை தேறி வருவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top