Connect with us

‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Featured

‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

‘மிக்ஜாம்’ புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் குழந்தைகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாமை சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

முகாமை தொடங்கி வைத்து பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது :

சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அங்கன்வாடி மையங்கள் , ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்களில் டிச.13ம் தேதி முதல் டிச.30 ஆம் தேதி வரை நடைபெறும்.

புயல் பாதிக்கபட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 9 மாதம் தொடங்கி 15 வயது வரையான குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது.

நடமாடும் மருத்துவ வாகனங்கள் நான்கு மாவட்டங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது;
160 வாகனங்கள் சென்னையில் இயங்கி வருகிறது.

6,421 முகாம்கள் மூலம் 4 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் . இதுவரை ஒட்டுமொத்தமாக நடத்தப்பட்டுள்ள 7 வார முகாம்களில் 7 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் . இன்னும் 3 வாரங்களுக்கு இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top