Connect with us

கருடன் படத்தில் காதல் நாயகனாக மாறிய நடிகர் சூரி

Soori_karudan_FIrst_Single

Cinema News

கருடன் படத்தில் காதல் நாயகனாக மாறிய நடிகர் சூரி

துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் கருடன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகர் சூரி அதில் காதல் நாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகைச்சுவை நடிகராக இருந்த சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் தயாரான விடுதலை 1 படத்தில் ஹீரோவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகியுள்ள நிலையில், கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்தின் கொட்டுக்காளி படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.

மேலும், ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நிவின் பாலியுடன் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார். இந்த ஏழு கடல் ஏழு மலை மற்றும் விடுதலை 2 படங்கள் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் சமீபத்தில் திரையிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படங்கள் தவிர வெற்றிமாறன் எழுதி, துரை செந்தில்குமார் இயக்கி வரும் கருடன் படத்தில் சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோருடன் சேர்ந்து முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டன.

அதில், சூரியின் கதாபாத்திரம் குறித்து சசிகுமார் பேசுவதுபோல் இடம்பெற்றுள்ளது. இதன்படி படம் முழுக்க முழுக்க சூரியை சுற்றியே நகரும் என்றும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தனை விட சூரிக்கு முக்கிய கதாபாத்திரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து தற்போது யுவன் சங்கர் ராஜா இசையில் சூரி மற்றும் ரேவதி ஷர்மா இடம்பெறும் பாடலை வெளியிட்டுள்ளனர். “யாரோட யாரோட என் காதல் கதை பேச. உன் கூட உன் கூட எத வச்சு நான் பேச” என தொடங்கும் இந்த பாடல் காதலை மிகவும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துவதாக இருப்பதால் சூரி இந்த படத்தில் காதல் நாயகனாக நடித்துள்ளார் எனத் தெரிகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நாங்குநேரி சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் +2 தேர்வில் சாதனை - உயர்கல்விக்கு உதவுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

More in Cinema News

To Top