Connect with us

அவசர நேரத்தில் உதவிய ரசிகர்கள் – விருந்தளித்து நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா..!!

Cinema News

அவசர நேரத்தில் உதவிய ரசிகர்கள் – விருந்தளித்து நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா..!!

தமிழக சூழ்ந்த ஆபத்தான நேரத்தில் ஓடி சென்று உதவிய ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா பலமான விருந்தளித்து நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இருக்கும் மாஸ் ஹீரோக்களிலில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. நடிப்பை தாண்டி கல்விக்காக பல மாணவ மாணவிகளுக்கு உதவி வரும் இவரது செயலுக்காகவே ஏரளமான இளைஞர்கள் இவரது ரசிகர் மன்றத்தில் இணைத்துள்ளனர்.

அன்பால் உருவாக்கிய இவரது ரசிகர் மன்றம் தமிழக ஏற்படும் பல அசாதாரண சூழலில் பல முறை மக்களை காப்பாற்றி அவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.

அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தென் தமிழகத்தை புரட்டிப்போட்ட கனமழையால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அப்போது சூர்யாவின் ரசிகர்கள் களத்தில் இறங்கி பல உதவிகளை செய்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து பல நற்பணிகளை செய்து வரும் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் சூர்யா மாபெரும் விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்.

அந்நிகழ்ச்சியில் தனது கையால் ரசிகர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் சூர்யாவும் உணவு உண்டுள்ளார்.

இந்த வீடியோவும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கைகொடுக்காத சாஞ்சு சாம்சனின் அதிரடி - டெல்லியிடம் போராடி வீழ்ந்தது ராஜஸ்தான்..!!

More in Cinema News

To Top