Connect with us

மகனின் பிறந்தநாளை வெளிநாட்டில் சத்தமின்றி கொண்டாடிய அட்லீ- பிரியா ஜோடி – கலக்கல் போட்டோஸ்

Cinema News

மகனின் பிறந்தநாளை வெளிநாட்டில் சத்தமின்றி கொண்டாடிய அட்லீ- பிரியா ஜோடி – கலக்கல் போட்டோஸ்

தங்கள் மகனின் பிறந்தநாளை வெளிநாட்டில் கோலாகலமாக கொண்டாடி உள்ள அட்லீ- பிரியா ஜோடியின் பர்த்டே புகைப்படங்கள் இணையத்தில் தெப்போது செம வைரலாக வலம் வருகிறது.

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் ஒரு இயக்குனர் யார் என்றால் சிறுபிள்ளையும் சொல்லிவிடும் அது இயக்குனர் சங்கர் தான் என்று. இவரின் உதவி இயக்குனராக இருந்து ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனரானவர் அட்லீ.

குருவின் பாதையில் பயணிக்கும் அட்லீ அவரைப்போலவே தன் படங்களையும் மிகப்பிரமாண்டமாக எடுத்து வருகின்றார்.

முதல் படமான ராஜா ராணி படத்தில் தொடங்கி ஷாருக்கானின் ஜவான் படம் வரை இவர் எடுத்த அணைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் .

அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா இருவரும் காதல் திருமணம் செய்து எட்டு வருடங்கள் ஆகி விட்டது . ஆனால் இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் அழகிய ஆன் குழந்தை பிறந்தது .

மீர் என பெயரிடப்பட்ட அந்த குழந்தை பிறந்து இன்றோடு 1 ஆண்டு ஆகிவிட்டது. இந்த நிலையில் தனது மகனின் முதல் பிறந்தநாளை அட்லீ மற்றும் ப்ரியா வெளிநாட்டில் கொண்டாடியுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அட்லீ தனது இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் அவரது மகனுக்கு வாழ்த்து கூறி அந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top