Connect with us

இட்லி கடை சம்பளம் விவகாரம்: அருண் விஜய் Vs தனுஷ்!

Featured

இட்லி கடை சம்பளம் விவகாரம்: அருண் விஜய் Vs தனுஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தனது திறமையால் மட்டும் நடிகராக இல்லாமல், தயாரிப்பாளர், பாடகர், மற்றும் இயக்குனராகவும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருகிறார்.

தனுஷின் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படங்கள் பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகியவையாகும். தற்போது அவர் இயக்கியிருக்கும் மூன்றாவது படம் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்”, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து, தனுஷ் தனது நான்காவது இயக்கப் படமாக “இட்லி கடை” என்கிற படத்தை உருவாக்கவுள்ளார். டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் கிராமத்து பின்னணியுடன் கூடியதாக இருக்கும். முக்கிய கதாபாத்திரங்களில் அருண் விஜய், ராஜ்கிரண், மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிக்க உள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, இப்படம் சம்பளம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. தனுஷ் தனது தயாரிப்பில் நடித்தாலும், இப்படத்திற்காக அருண் விஜய் பெற்ற சம்பளம் அதிகம் என கூறப்படுகிறது. தகவல்களின் படி, அருண் விஜய் ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார், இது தனுஷின் சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகம் என்பதாக கூறப்படுகிறது.

இந்த விவாதம் சினிமா துறையில் புது பரபரப்பை உருவாக்கியிருக்கிறது, மேலும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பையும் அதிகரிக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top