Connect with us

அபர்ணாவுக்கு தந்தையின் எச்சரிக்கை: ‘இந்த ஒரு படம் போதும்..

Featured

அபர்ணாவுக்கு தந்தையின் எச்சரிக்கை: ‘இந்த ஒரு படம் போதும்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அபர்ணா பாலமுரளி. மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்த அவர், 2017-ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன் பின், சூரரைப் போற்று படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துப் பெரும் பிரபலத்தையும், தீஷனல் விருது பரிசையும் பெற்றார்.

சமீபத்தில், அபர்ணா தனுஷ் இயக்கிய ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது, அவர் ருத்ரம் என்ற படத்தில் முக்கிய ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இது வரும் டிசம்பர் 13-ம் தேதி வெளியிடப்படுகிறது.

அபர்ணா, இந்தப் படத்தில் நடிப்பதற்கான பயிற்சிகளை மிகவும் கடுமையாக செய்துள்ளதை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: “ருத்ரம் படத்தில் சவாலான கதாபாத்திரத்தில் நான் நடித்ததால் பல முன் பயிற்சிகளை எடுத்து கொண்டேன். அந்த காட்சிகளை வீட்டில் ரிகர்சல் செய்ய என் அப்பாவை பயன்படுத்தினேன். இந்த தந்தை இருந்தது எனக்கு ஒரு வசதியாக இருந்தது.”

மேலும், அவர் சிரிப்புடன் கூறியதாவது: “என் தந்தை என்னிடம் அந்த ஒரு ஆக்சன் படம் மட்டும் போதும், இனிமேல் வேறு எந்த ஆக்சன் படங்களையும் தயவு செய்து ஒப்புக்கொள்ளாதே என்று கேட்டுக் கொண்டார்.”

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top