Connect with us

வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா மக்கள் – முதல் ஆளாக நிதி உதவி வழங்கிய நடிகர் ஜூனியர் என்டிஆர்..!!

Cinema News

வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா மக்கள் – முதல் ஆளாக நிதி உதவி வழங்கிய நடிகர் ஜூனியர் என்டிஆர்..!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலங்கானா மாநில அரசுகளின் முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது . இரு மாநிலங்களில் உள்ள பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால் அங்குள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கடந்த 3 நாட்களாக ஆந்திராவில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் கிட்டத்தட்ட பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் நிவரான பணிக்காக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்களின் பேரிடர் நிவாரண நிதிக்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தலா ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் அறிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேரளாவில் முதல்முறையாக வரலாற்றில் பெயர் பதித்த லோகா!

More in Cinema News

To Top