Connect with us

‘கேப்டன் மில்லர்’ பட நிகழ்ச்சியில் என்ன நடந்தது?! தொகுப்பாளினி ஐஸ்வர்யாவின் பகிர்ந்த விஷயம்!

Cinema News

‘கேப்டன் மில்லர்’ பட நிகழ்ச்சியில் என்ன நடந்தது?! தொகுப்பாளினி ஐஸ்வர்யாவின் பகிர்ந்த விஷயம்!

தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த தொகுப்பாளினி ஐஸ்வர்யாவை கூட்டத்தில் இருந்த ஒருவர் தவறாக நடந்து கொண்டதை அடுத்து அந்த நபரை அவர் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தநிலையில் இது குறித்து ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாவில் விளக்கமாக பதிவு செய்துள்ளார். ’கேப்டன் மில்லர்’ நிகழ்ச்சியில் நான் பங்கேற்க வந்த போது என்னிடம் ஒருவன் தவறாக நடந்து கொண்டான். உடனே அவனை விடாமல் துரத்தி பிடித்தேன். அவன் தப்பி ஓடி விடாமல் அவனை தொடர்ந்து பிடித்து அடித்தேன்.

ஒரு பெண்ணுடைய அங்கத்தை தவறான முறையில் தொடுவதற்கு அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்திருக்கும். இது என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனால் நல்ல வேலையாக என்னை சுற்றி நல்ல மனிதர்கள் இருந்தனர். மரியாதையான மனிதர்கள் மத்தியில் இப்படியும் சில அரக்கர்கள் இருக்கின்றனர் என்பதை நினைக்கும் போது பயமாக இருக்கிறது’ என்று பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே மன்சூர் அலிகான் நடித்த ’சரக்கு’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூல் சுரேஷ் அவருக்கு வலுக்கட்டாயமாக மாலை போட்டது சர்ச்சையான நிலையில் தற்போது ’கேப்டன் மில்லர்’ விழாவில் நடந்த சர்ச்சையான நிகழ்விற்கும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அட்டகாசமான ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியானது மம்மூட்டியின் ‘டர்போ’ படத்தின் ட்ரெய்லர்..!!

More in Cinema News

To Top