Connect with us

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர் கான் – என்ன காரணம்?

Featured

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர் கான் – என்ன காரணம்?

இயக்குநர் ஆர். எஸ். பிரசன்னா இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் உருவாகிய படம் ‘சித்தாரே ஜமீன் பர்’ கடந்த ஜூன் 20ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் அமீர் கானுடன் ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெளிவந்த 10 நாட்களிலேயே உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்து, பெரும் சாதனையை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தில் முதலில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்ததாகவும், பின்னர் அமீர் கானின் திடீர் முடிவால் அந்த திட்டம் மாற்றம் கண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதைப்பற்றி அமீர் கான் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவிக்கையில்,
‘லால் சிங் சத்தா’ படத்திற்கு பிறகு ஒரு காலத்திற்கு சினிமாவிலிருந்து ஓய்வு எடுக்க நினைத்தேன். இந்த முடிவை இயக்குநர் ஆர். எஸ். பிரசன்னாவிடம் தெரிவித்த போது, நடிகராக இல்லையென்றால் தயாரிப்பாளராக தொடர்ந்து வேலை செய்யலாம் என்று அவர் கூறினார். அதனை ஏற்றுக்கொண்டேன்.

அந்தபோது ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படத்தை தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் உருவாக்க முடிவு செய்தோம். இதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஃபர்ஹான் அக்தரிடம் கதை சொன்னோம். இருவருக்கும் கதையானது மிகவும் பிடித்துப் போனது. அவர்கள் கால்சீட்டும் ஒப்புக்கொண்டனர்.

ஆனால், ஒரு கட்டத்தில் இந்தக் கதை எனக்கு மிகவும் நெருக்கமாகவே தேறியது. இதிலே நாமே நடிக்கலாமே என எனக்குள் தோன்றியது. அந்த அளவிற்கு கதை மீது பாசம் இருந்தது. இதை இயக்குநர் பிரசன்னாவிடம் பகிர்ந்தேன். அவரும் சம்மதித்தார். அதன் பிறகு, சிவகார்த்திகேயன் மற்றும் ஃபர்ஹான் அக்தர் இருவரிடமும் நேரில் சென்று இந்த முடிவைப் பற்றி தெரிவித்தேன். அவர்களிடம் மன்னிப்பும் கேட்டேன். முதலில் அவர்களுக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும், பின்னர் என் நிலைமைவை அவர்கள் புரிந்துகொண்டார்கள்” என்று தெரிவித்தார் அமீர் கான்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top