Connect with us

🔥 ‘புறநானூறு’ கைவிடப்பட்டது ஏன்? – திரையுலகில் பரவும் பேசுபொருள்

Cinema News

🔥 ‘புறநானூறு’ கைவிடப்பட்டது ஏன்? – திரையுலகில் பரவும் பேசுபொருள்

‘இறுதிச்சுற்று’, ‘சூரரைப் போற்று’ போன்ற தொடர்ச்சியான வெற்றிப் படங்களை வழங்கி தமிழ் திரையுலகில் தனித்த இடம் பிடித்த இயக்குநர் சுதா கொங்கரா, அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘பராசக்தி’. இந்த படம் ஆரம்பத்தில் ‘புறநானூறு’ என்ற தலைப்பில் நடிகர் சூர்யாவை வைத்து உருவாக இருந்தது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா, முக்கிய கதாபாத்திரங்களில் துல்கர் சல்மான் மற்றும் விஜய் வர்மா ஆகியோரும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தனர்.

ஆனால், படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகு, சில காரணங்களால் இந்த திட்டத்திலிருந்து விலகுவதாக சூர்யா அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ‘புறநானூறு’ திட்டம் கைவிடப்பட்டு, பின்னர் அதே இயக்குநரின் கையில் ‘பராசக்தி’ என்ற பெயரில் புதிய வடிவில் படம் உருவானது. இந்த மாற்றம் திரையுலகில் பெரும் பேசுபொருளாக மாறியது.


மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  💥 2025-ல் முதல் 1000 கோடி வசூல் – ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ சாதனை

More in Cinema News

To Top