Connect with us

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ராயன் படக்குழு – என்ன மேட்டர்னு தெரியுமா..?

Cinema News

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ராயன் படக்குழு – என்ன மேட்டர்னு தெரியுமா..?

உலககெங்கும் இருக்கும் திரையுலகில் தனுஷின் ராயன் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது ரசிகர்களுக்கு ராயன் படக்குழு சிறப்பான இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் தான் ராயன் . எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என பெரும் நட்சத்திர பட்டாளத்தையே தனுஷ் களமிறக்கியுள்ளார்

இதுமட்டுமின்றி தனுஷின் 50 ஆவது படமான இப்படத்தில் எந்த குறையும் இருக்க கூடாது என்பதற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானையும் இப்படத்தில் இசையமைக்க வைத்துள்ளார் நடிகர் தனுஷ்.

ஏராளமான சண்டை காட்சிகள் கொண்ட கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு படக்குழு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளது .

படத்தின் முதல் நாளான 26ம் தேதி அன்று சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணிக்குள் 5 காட்சிகள் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூரி நடிப்பில் உருவாகும் 'மண்டாடி' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபரீதம்

More in Cinema News

To Top