Connect with us

அனிமல் படத்தின் இரண்டாம் பாகம்.. புது அப்டேட் கொடுத்த நடிகர் ரன்பீர் கபூர்

Animal_Part2_Update

Cinema News

அனிமல் படத்தின் இரண்டாம் பாகம்.. புது அப்டேட் கொடுத்த நடிகர் ரன்பீர் கபூர்

விமர்சன ரீதியாக சர்ச்சையை எதிர்கொண்டாலும், வசூலை வாரிக்குவித்த அனிமல் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த புதிய அப்டேட்டை நடிகர் ரன்பீர் கபூர் வெளியிட்டுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் அனிமல் என்ற இந்தி படம் டிசம்பரில் வெளியானது. படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

படத்தில் இடம் பெற்ற அதிக அளவிலான வன்முறை காட்சிகள், முத்த மற்றும் படுக்கையறைக் காட்சிகள் கடுமையான சர்ச்சைகளை உருவாக்கியது. எனினும், படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் வசூல் ரீதியாக கலெக்ஷனை அள்ளியது.

இதனால், படத்தை இந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இதர மொழிகளிலும் டப் செய்து வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் வரும் என அப்போதே இயக்குனர் சந்தீப் ரெட்டி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், படத்தின் ஹீரோ ரன்பீர் கபூர் தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் படத்தின் ஒன்லைன் தயாராகி விட்டதாகக் கூறினார். மேலும், இன்னும் சில மாதங்களில் இயக்குனர் படத்தின் கதையை முழுமையாக்கும் வேலையைத் தொடங்குவார் என்றும், அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இரண்டாம் பாகத்தில் இரண்டு ரன்பீர் கபூர்கள் இருப்பார்கள் என்றும் ஒருவர் ஹீரோவாகவும், இன்னொருவர் வில்லனாகவும் இருப்பார் என்றும் தகவல் கசிந்துள்ளது. இதனால் ரன்பீர் கபூரின் ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் காம்போவில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது..!!!
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top