Connect with us

வௌ்ளதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நயன்தாரா – குவியும் பாராட்டுக்கள்

Cinema News

வௌ்ளதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நயன்தாரா – குவியும் பாராட்டுக்கள்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவிக்கரம் நீதியுள்ள நடிகை நயன்தாராவின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது .

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது . இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படிப்படியாக மின் விநியோகம் நடைபெற்று வருகிறது. இருப்பினும் இன்னும் சில பகுதிகளில் வெள்ளம் வடியாமலே இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கடைகள் ஏதும் திறக்கமுடியாமல் இருப்பதால் குழந்தைகளும் பெண்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இந்நிலையில், வேளச்சேரி பகுதியில் நயன்தாரா சார்பில் நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன .

நயன்தாராவுக்குச் சொந்தமான ஃபெமி9 நிறுவனத்தின் நாப்கின்கள் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. இதையடுத்து, பெண்கள் பலரும் அவருக்கு நன்றி தெரிவித்ததுடன் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மௌனம் பேசியதே முதல் இன்று வரை 🌟 | திரிஷாவின் 23 ஆண்டுகளான பொற்கால திரையுலகப் பயணம் 🎬

More in Cinema News

To Top