Connect with us

2வது டெஸ்ட்: இந்தியா மோசமான பேட்டிங்… பாலோ-ஆன் அவமானம்!

Sports

2வது டெஸ்ட்: இந்தியா மோசமான பேட்டிங்… பாலோ-ஆன் அவமானம்!

கவுகாத்தியில் நடைபெறும் 2வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்தியா மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா முத்துசாமியின் 109 ரன்களைத் தாங்கி 489 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்தியாவின் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

பின் பேட்டிங் தொடங்கிய இந்தியா, தொடக்கத்தில் ஜெய்ஸ்வால்–ராகுல் ஜோடி 65 ரன்கள் சேர்த்தாலும், ராகுல் 22, சாய் சுதர்சன் 15, ஜெய்ஸ்வால் 58 என முக்கிய பேட்ஸ்மேன்கள் விரைவில் அவுட் ஆனார்கள்.

மத்தியில் துருவ் ஜூரெல் (0), பண்ட் (7), ஜடேஜா (6), நிதிஷ் ரெட்டி (10) ஆகியோர் தோல்வியுற்றனர். இந்த விக்கெட்டுகளில் 4 பேரை மார்கோ ஜான்சன் அசத்தலாக வீழ்த்தினார்.

122/7 என நெருக்கடியில் இருந்த இந்தியாவை வாஷிங்டன் சுந்தர் – குல்தீப் யாதவ் ஜோடி 72 ரன்கள் சேர்த்து காப்பாற்றினர். சுந்தர் 48 ரன்களில், குல்தீப் 19 ரன்களில் அவுட் ஆனனர்.

மொத்தம் 201 ரன்களில் இந்தியா ஆல் அவுட். 288 ரன்கள் முன்னிலையில் இருந்த தென் ஆப்பிரிக்கா பாலோ-ஆன் வழங்காமல், நேரடியாக இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தோல்வி காரணம் குறித்து கம்பீருக்கு கவாஸ்கர் முழு ஆதரவு

More in Sports

To Top