Connect with us

அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே : குடும்பத்துடன் விஜய்யை சந்தித்த நடிகை ரம்பா -வைரல் போட்டோஸ்..!!

Cinema News

அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே : குடும்பத்துடன் விஜய்யை சந்தித்த நடிகை ரம்பா -வைரல் போட்டோஸ்..!!

நீண்ட நெடு வருடங்களுக்கு பின் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை நடிகை ரம்பா குடும்பத்துடன் சந்தித்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

தமிழ் சினிமாவின் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா . பல உச்ச நடிகர்களுடன் கைகோர்த்து இவர் நடித்துள்ள பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. அதிலும் குறிப்பாக நடிகர் விஜயுடன் இவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்களின் அமோக வரவேற்ப்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் திருமணத்திற்கு பின் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நடிகை ரம்பா வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் . இருவருக்கு 3 குழந்தைகள் உள்ளது.

என்னதான் வெளிநாட்டில் செட்டில் ஆனாலும் அவ்வப்போது இந்தியாவிற்கு வரும் நடிகை ரம்பா தனக்கு நெருக்கமானவர்களை சந்தித்து அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்வார்.

இந்த நிலையில், நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் சென்று நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை ரம்பா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பல ஆண்டுகளுக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என நடிகை ரம்பா பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூரி நடிப்பில் உருவாகும் 'மண்டாடி' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபரீதம்

More in Cinema News

To Top