Connect with us

இறந்தும் வாழும் நடிகர் டேனியல் பாலாஜி – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட குடும்பத்தார்..!!

Cinema News

இறந்தும் வாழும் நடிகர் டேனியல் பாலாஜி – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட குடும்பத்தார்..!!

தமிழ் சினிமாவில் பிரபல குணசித்ர நடிகராக வலம் வந்த டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் அவரது இரு கண்களும் தானம் செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர் .

சின்னத்திரை நடிகராக கலைத்துறையில் கால்பதித்து வெள்ளித்திரையில் மக்கள் மனதில் நின்ற குணசித்ர நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் டேனியல் பாலாஜி.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காக்க காக்க’ படத்தில் ஸ்ரீகாந்த் என்ற போலீஸ் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களின் கவனம் ஈர்த்த டேனியல் பாலாஜி அதன் பின் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கொடூர வில்லனாக நடித்து பெயரையும் புகழையும் பெற்றார்.

இதையடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்க ரசிகர்கள் கொண்டாடும் சிறந்த குணசித்ர நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் இருந்த டேனியல் பாலாஜிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.பின்னர் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுத்தபோது அவர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

48 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள டேனியல் பாலாஜியின் மறைவு அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக தனது கண்களை தானம் செய்ய நடிகர் டேனியல் பாலாஜி முடிவெடுத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. அதன்படி, அவர் மறைவை அடுத்து அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.

புரசைவாக்கத்தில் அவர் இல்லத்தில் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவர்கள் அங்கு வந்து கண்களை தானமாகப் பெற்று சென்றுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திருச்செந்தூர் கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சாமி தரிசனம்..!!

More in Cinema News

To Top