Connect with us

ஞானவேல்ராஜா சொல்வது அனைத்துமே பொய் தான்..நந்தா பட தயாரிப்பாளர் குற்றச்சாட்டு!

Cinema News

ஞானவேல்ராஜா சொல்வது அனைத்துமே பொய் தான்..நந்தா பட தயாரிப்பாளர் குற்றச்சாட்டு!

கார்த்தி ஒரு நல்ல இடத்தில் இருந்து வருகின்றார்….இந்நிலையில் ஜப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் கார்த்தி நடித்த 25 படங்களின் இயக்குனர்களை அழைத்து பேச வைத்து இருந்தனர்…அது வைரலாக பார்க்கவும்பட்டது….ஆனால் அவரது முதல் படமான பருத்திவீரன் பட இயக்குனர் அமீரை அழைக்கவில்லை. அதனால் சூர்யா குடும்பம் மற்றும் இயக்குனர் அமீர் இடையே என்ன தான் பிரச்சனை என பேச்சு எழுந்தது…அது அதிக அளவில் சண்டை வரும் அளவு இப்போது மாறி இருக்கின்றது.

இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒரு பேட்டியில் அமீர் பற்றி பல்வேறு புகார்களை கூறினார்…கணக்கு மோசடி செய்தார் அமீர் என அவர் கூறி இருந்தார்…அவரை பல சொற்கள் சொல்லி விமர்சித்தும் இருந்தார்…பலரும் ஞானவேல்க்கு எதிராக பேசி இருந்தார்…

இந்நிலையில் ஒரு தயாரிப்பாளர் அமீருக்கு சாதகமாக பேசி இருக்கின்றார்..அமீரின் முதல் படமான மௌனம் பேசியதே படத்தை நந்தா பட தயாரிப்பாளர் தான் எடுத்திருந்தார்…

தயாரிப்பாளர் சூர்யாவிடம் வேறொரு பிரபல இயக்குனரை வைத்து படமெடுக்கலாம் அதன் பின் அமீருக்கு வாய்ப்பு தரலாம் என கூறியதாக ஞானவேல் பேட்டி அளித்திருக்கிறார்…அதனால் அந்த தயாரிப்பாளருக்கும் ஒரு நெகேட்டிவ் விமர்சனம் வந்தது…

இதற்கு நந்தா பட தயாரிப்பாளர் பதில் கொடுத்திருக்கிறார்.அது சுத்த பொய் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும் இதனை சூர்யாவிடம் கேட்டாலே அது பொய் என சொல்வார்….அமீரை தான் முதலில் ஓகே செய்தேன் அவர் சொன்ன கதைக்கு தான் சூர்யாவை யோசித்தோம்…ஞானவேல் சொல்வது முழுவதுமே பொய் தான் என சொல்லி இருந்தார் நந்தா பட தயாரிப்பாளர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top