Connect with us

டால்பி தொழில்நுட்பத்தில் திரையரங்குகளில் வரவுள்ள “பாகுபலி: தி எபிக்”…

Cinema News

டால்பி தொழில்நுட்பத்தில் திரையரங்குகளில் வரவுள்ள “பாகுபலி: தி எபிக்”…

சென்னை: எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ‘பாகுபலி’ படம் 2015-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன், ராணா டகுபதி, நாசர், சத்யராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். படம் வெளியானபின் உலகளாவிய அளவில் ரூ. 1800 கோடிக்கு மேல் வசூல் செய்து வரலாற்றுச் சாதனை படைத்தது.

அதன்பின், 2017-ம் ஆண்டு பாகுபலி 2 வெளியாகி, அதுவும் பிரம்மாண்ட வெற்றியுடன் உலகம் முழுவதும் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்நிலையில், பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ள நிலையில், படக்குழு ‘பாகுபலி: தி எபிக்’ என்ற பெயரில் இந்தப் படத்தை ரி-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் தனித்தனியாக ரீ-ரிலீஸ் செய்யாமல் ஒன்றாக இணைத்து அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளனர்.

ரசிகர்கள் அதிக உற்சாகத்துடன் எதிர்பார்க்கும் இப்படம், மேக்ஸ் தொழில்நுட்பம் மூலம் அதிக திரை அனுபவத்தை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், படம் டால்பி சினெமா, டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்துடன் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஜயுடன் போட்டியாக நிற்கும் சிவகார்த்திகேயன்… பிரபலம் தெரிவித்த தகவல்

More in Cinema News

To Top