Connect with us

“வெளியாகி இரண்டு ஆண்டுகளை கடந்த ‘மாநாடு’ திரைப்படம்! வெங்கட் பிரபு வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!”

Cinema News

“வெளியாகி இரண்டு ஆண்டுகளை கடந்த ‘மாநாடு’ திரைப்படம்! வெங்கட் பிரபு வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!”

கோலிவுட் சினிமாவின் ஜாலியான இயக்குநர் என வெங்கட் பிரபு இயக்கியத் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிலம்பரசன் ஹீரோவாக நடித்திருந்தார். ஒரு மாநாடு, அங்கு நடக்கவிருக்கும் அசம்பாவிதம், அதை தடுக்க நினைக்கும் இளைஞனுக்கு அந்த நாள் மட்டுமே நாள் கணக்காக ரிபீட் ஆகிறது.

ஹாலிவுட்டில் இதுபோன்ற எத்தனையே திரைப்படங்கள் வந்திருந்தாலும், தமிழக்கு இந்த டைம் லுப் கதைக்களம் புதுசு என்பதால், இந்த படத்தை கொண்டாடினார்கள். ஒரே காட்சி பல முறை வந்தாலும், அந்த காட்சி சலிப்பை ஏற்படுத்தாமல் கதையை அழகாக கொண்டு சென்று இருப்பார் வெங்கட் பிரபு.

அப்துல் காலீக் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த சிம்புவிற்கு இத்திரைப்படம் ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்து அடுத்த திரைப்படங்களில் மாஸ் காட்டி வருகிறார். இப்படத்தில் வில்லனாக நடித்திருந்த எஸ்ஜே.சூர்யா தலைவரே தலைவரே என்ற வசனத்தை பேசி கைத்தட்டலை அள்ளினார்.

இந்நிலையில், மாநாடு படம் வெளியாகி இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, மாநாடு படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாநாடு திரைப்படத்தை உருவாக்கியது சிறப்பான அனுபவமாக இருந்தது. வாழ்நாள் முழுவதும் அப்படத்தை என்னால் மறக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சியான் விக்ரம் 63 – நாயகி யார் தெரியுமா? எதிர்பாராத கூட்டணி!

More in Cinema News

To Top