Connect with us

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட ‘சிறை’ | விக்ரம் பிரபு மிரட்டல்

Cinema News

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட ‘சிறை’ | விக்ரம் பிரபு மிரட்டல்

நடிகர் விக்ரம் பிரபு மீண்டும் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘சிறை’. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் கதையை, ‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ் தனது உண்மை அனுபவத்தை அடிப்படையாக கொண்டு எழுதியுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி, இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான மனதளவிலான பயணமே கதையின் மையமாக அமைந்துள்ளது.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார். தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் LK அக்ஷய் குமார் இந்த படத்தின் மூலம் அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ள ‘சிறை’ திரைப்படம் வருகிற 25-ந்தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மௌனம் பேசியதே முதல் இன்று வரை 🌟 | திரிஷாவின் 23 ஆண்டுகளான பொற்கால திரையுலகப் பயணம் 🎬

More in Cinema News

To Top