Connect with us

செல்வராகவன் மீண்டும் விவாகரத்தா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் கேள்விகள்

Cinema News

செல்வராகவன் மீண்டும் விவாகரத்தா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் கேள்விகள்

பன்முகத் திறமை கொண்ட இயக்குநர் செல்வராகவன் மீண்டும் தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபமாக அவரது மனைவி கீதாஞ்சலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து செல்வராகவனுடன் எடுத்துக் கொண்ட அனைத்து புகைப்படங்களையும் நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதா? இரண்டாவது மனைவியிடமிருந்து செல்வராகவன் பிரிவாரா? என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகின்றன.

தற்போது பிரபலங்கள் பலரும் விவாகரத்தை நேரடியாக அறிவிக்காமல், புகைப்படங்களை டெலிட் செய்வதையே மறைமுக அறிவிப்பாக பயன்படுத்தி வருவதால், ரசிகர்களின் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கு முன்பும் செல்வராகவன் தனது சமூக வலைதள பதிவுகள் மூலம் பல்வேறு வதந்திகளை கிளப்பியவர். கடந்த ஆண்டு அவர் பதிவிட்ட “தனியாகத்தான் வந்தோம், தனியாகத்தான் போவோம்” என்ற தத்துவக் கருத்து, அவர் மீண்டும் விவாகரத்து செய்யப் போகிறாரா என்ற பேச்சுக்கு தீப்பொறியாக அமைந்தது.

ஆனால், அந்த வதந்திகள் பரவிய உடனே மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். இப்போது மீண்டும் கீதாஞ்சலி புகைப்படங்களை நீக்கியிருப்பதால், இது உண்மையிலேயே பிரிவின் அறிகுறியா? அல்லது தேவையற்ற வதந்தியா? என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘96’ குட்டி ஜானு இப்போது எப்படி? கௌரி கிஷனின் லேட்டஸ்ட் லுக்

More in Cinema News

To Top