Connect with us

கமல் கண்ணீருடன் போட்ட ட்வீட் ரசிகனின் மனசு இதுதான்…!

Cinema News

கமல் கண்ணீருடன் போட்ட ட்வீட் ரசிகனின் மனசு இதுதான்…!

பழம்பெரும் நடிகரான கே.விஸ்வநாத் நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இது பெரும் அதிர்ச்சியை சினிமாவிற்கு ஏற்படுத்தி உள்ளது..

இந்திய சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் கே.விஸ்வநாத். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் இயக்கிய சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் ஆகியவை இந்திய சினிமாவில் மிக முக்கிய திரைப்படங்களாகும்.

நடிகராக கே. விஸ்வநாத், அஜித்குமார் நடித்த முகவரி, விக்ரம் நடித்த ராஜபாட்டை, சூர்யா நடித்த சிங்கம் 2, தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, கமலுடன் உத்தம வில்லன், குருதிப்புனல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் லிங்கா ஆகிய படங்களில் தமிழில் நடித்துள்ளார்.

50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இவர் இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர்.

இவர் மத்திய அரசின் பத்மஶ்ரீ விருதையும் பெற்றுள்ளார். ஆறு முறை இந்திய அரசின் தேசிய விருதை வென்றவர். 8 முறை ஆந்திர மாநில அரசின் விருதை வென்றவர். இந்நிலையில் நேற்று வயது முதிர்வின் காரணமாக கே.விஸ்வநாத் காலமானதாக அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் உருக்கமான அஞ்சலி குறிப்பு ஒன்றை தனது கைப்பட எழுதி இருக்கிறார். அதில் கலாதபஸ்வி கே விஸ்வநாத் காரு அவர்கள் வாழ்வின் நிலையற்ற தன்மையையும் கலையின் அழியாத தன்மையையும் முழுமையாகப் புரிந்துகொண்டவர்.

எனவே அவரது கலை அவரது வாழ்நாள் மற்றும் காலத்திற்கு அப்பாலும் கொண்டாடப்படும். வாழ்க அவரது கலை. தீவிர ரசிகர், கமல்ஹாசன் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதனை பலர் பகிர்ந்து வருகின்றனர்…..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top