Connect with us

போடு அடுத்தடுத்து அரை சதங்கள்..இந்திய அணி வெறித்தனம்..!ராகுலா – கோலியா போட்டி போட்டு கலக்கும் வீரர்கள்!

Sports

போடு அடுத்தடுத்து அரை சதங்கள்..இந்திய அணி வெறித்தனம்..!ராகுலா – கோலியா போட்டி போட்டு கலக்கும் வீரர்கள்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் மழை காரணமாக பாதிக்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் இன்று நடந்து கொண்டு உளள்து…

கொழும்பு நகரில் உள்ள ஆ.ர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.

சொல்லப்போனால் 6.15 மணி அளவில் மழை நின்ற நிலையில் மிட்விக்கெட் திசையில் அதிக அளவில் ஈரப்பதம் காணப்பட்டது.அதனால் அப்படியே போட்டி நிறுத்த பட்டது..

இதைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஆடுகளத்தை நடுவர்கள் பார்வையிட்டனர். அப்போது மைதானத்தில் ஈரம் முழுமையாக போகாமல் இருந்தது.இதையடுத்து மின்விசிறிகள் கொண்டு ஈரத்தை உலர்த்தும் பணி நடைபெற்றது.

8.30 மணிக்கு மீண்டும் ஆடுகளத்தை பார்வையிடுவதாக நடுவர்கள் தெரிவித்தனர் ஆனால் அந்த நேரத்தில் மழை மீண்டும் வந்து ஆட்டத்தை கலைத்தது…இதைத் தொடர்ந்து ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது…ஏற்கனவே ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டிருப்பதால் இன்று போட்டி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது..

இதில் சிறப்பம்சமாக kl ராகுலின் அரை சதம் மற்றும் விராட் கோலியின் அரை சதம் போட்டியின் திருப்பு முனையாக அமைந்து உள்ளது இதுவரை இந்தியா அணி 243 – 2 (40 ஓவர்களில்) என்ற நிலையில் உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "IND v AUS: 3rd ODI - வரலாற்று சாதனை படைக்குமா ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி?!"

More in Sports

To Top