Connect with us

இன்றும் வெற்றி வாகை சூடுமா இந்திய அணி…ஆஸ்திரேலியா Tough கொடுக்குமா??

Sports

இன்றும் வெற்றி வாகை சூடுமா இந்திய அணி…ஆஸ்திரேலியா Tough கொடுக்குமா??

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு இந்தூரில் நடைபெறுகிறது…இதற்காக அணைத்து ரசிகர்களும் காத்துள்ளனர்..

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் மொஹாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது அது மிகவும் த்ரில் வெற்றியாக அமைந்தது…

இதன்மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் ஆட்டத்தில் பந்து வீச்சில் மொகமது ஷமி 5 விக்கெட்கள் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு பயத்தை கொடுத்திருந்தார்.

இதே போல பேட்டிங்கில் கில், ருதுராஜ் கெய்க்வாட், கேப்டன் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் இருந்தால் இந்திய அணி வெற்றியை வசப்படுத்தி தொடரை கைப்பற்றக்கூடும் என்று எதிர்பார்க்க படுகிறது,

கடந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்படத் தவறிய ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோர் பார்முக்கு திரும்புவதில் ஆர்வம் காட்டவர் என எதிர்பார்க்க படுகிறது..

போட்டி நடைபெறும் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் கடைசியாக இந்திய அணியானது நியூஸிலாந்துக்கு எதிராக 385 ரன்களை எடுத்து சாதனை படைத்து இருந்தது…

இன்றைய ஆட்டத்தில் ரன் வேட்டை நடக்கும் என எதிர்பார்க்க படுகிறது .அதனை போல ஆஸ்திரேலிய அணி மீண்டும் ஒரு முறை தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் இதனால் அந்த அணி Tough கூட கொடுக்க வாய்ப்பு இருக்கிறது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "சூரியக் காற்று அளவீடுப் பணியை தொடங்கியது ஆதித்யா - L1! ISRO வெளியிட்ட தகவல்!"

More in Sports

To Top