Connect with us

மிரட்டலான கதைக்களத்தில் மீண்டும் படம் இயக்க வரும் தனுஷ்..! இணையத்தில் கசிந்த டக்கர் தகவல்…

Cinema News

மிரட்டலான கதைக்களத்தில் மீண்டும் படம் இயக்க வரும் தனுஷ்..! இணையத்தில் கசிந்த டக்கர் தகவல்…

இந்திய திரையுலகில் தற்போது புகழின் உச்சத்தில் இருக்கும் ,முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் . தமிழ், பாலிவுட் என இந்திய சினிமாவில் தாறுமாறாக கலக்கி வந்த அவர் தற்போது ஹாலிவுட் வரை சென்று அழுத்தமான கால் தடத்தை பதித்துவிட்டார் .

இதையடுத்து குளோபல் ஸ்டாராக வலம் வரும் நடிகர் தனுஷின் நடிப்பில் உருவாகி உள்ள வாத்தி படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது . இதையடுத்து தற்போது கேப்டன் மில்லர் படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் இறுதியில் முடியும் என்று கூறப்படுகிறது .

இந்நிலையில் கேப்டன் மில்லர் படம் முடிந்த கையோடு தனுஷ் படம் டைரக்டு செய்ய முடிவு செய்து இருப்பதாகவும் இதன் படப்பிடிப்பை மே மாதம் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் இணையத்தில் தாறுமாறான தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்துக்கான திரைக்கதையை தனுஷ் எழுதி முடித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. வடசென்னை பாணியில் தரமான கதை உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் . இந்த படத்தை தனுஷ் இயக்குவதுடன் ஒரு சில காட்சிகளில் கவுரவ தோற்றத்திலும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது .

இதற்கு முன் ராஜ்கிரண் நடித்த ப.பாண்டி படத்தை தனுஷ் எழுதி இயக்கி அதில் நடித்தும் இருந்தார். அந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top